உலகக்கோப்பை செஸ் தொடரில் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதன்மூலம், விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு உலகக்கோப்பை செஸ் போட்டிக்கு முன்னேறிய வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா அடைந்துள்ளார்.
அரையிறுதிப் போட்டியில் உலகின் 2ஆம் நிலை வீரரான அமெரிக்காவைச் சேர்ந்த ஃபேபியானோ கருனாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப் போட்டியில் நார்வே நாட்டைச் சேர்ந்த கார்ல்சனை எதிர்கொள்ளவுள்ளார்.