பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியினை இலங்கையில் விளையாடி வருகிறது. ஆசியக் கோப்பை வரும் ஆக.30 ஆம் நாள் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டி பாகிஸ்தான் நேபாளம் அணிகள் மோதுகின்றன.
இதையும் படிக்க: யோ யோ உடற்தகுதி தேர்வில் விராட் கோலியை முந்திய ஷுப்மன் கில்!
முதல் ஒருநாள் போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தா வெற்றி பெற்றது. 2வது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் 302 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. ஷதாப் கான் சிறப்பாக விளையாடினார். பந்து வீச்சாளர் நசீம் ஷா கடைசி ஓவரில் தனது அபாரமான பேட்டிங்கின் மூலமாக வெற்றியை பாகிஸ்தான் அணிக்கு உரித்தாகினார்.
இதையும் படிக்க: எல்சியூ நிச்சயம்?: லியோ பட டாட்டூடன் நடிகை த்ரிஷா!
இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கினை தேர்வு செய்துள்ளது. 13 ஓவர் முடிவில் பாக். 52/2 ரன்கள் எடுத்துள்ளது.
பாபர் ஆஸம் -10*, ரிஸ்வான் - 0* . இமாம் உல் ஹக் 13 ரன்களுக்கும் ஃப்கர் ஜமான் 27 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என பாகிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.