நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

பந்துவீச்சாளர்களின் தயார் நிலையை ஆசியக் கோப்பை தொடர் பரிசோதிக்கும்: வாசிம் அக்ரம்

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆசியக் கோப்பை நடைபெறுவதால் அதில் பங்கு பெறும் அணிகளின் பந்துவீச்சாளர்கள் உலகக் கோப்பைக்கு எந்த அளவுக்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை சோதிக்கும் விதமாக அமையும்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2023, 4:12 pm IST

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆசியக் கோப்பை நடைபெறுவதால் அதில் பங்கு பெறும் அணிகளின் பந்துவீச்சாளர்கள் உலகக் கோப்பைக்கு எந்த அளவுக்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை சோதிக்கும் விதமாக அமையும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 30) தொடங்க உள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் மோதுகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் மோதுகின்றன. 

இந்த நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆசியக் கோப்பை நடைபெறுவதால் அதில் பங்கு பெறும் அணிகளின் பந்துவீச்சாளர்கள் உலகக் கோப்பைக்கு எந்த அளவுக்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை சோதிக்கும் விதமாக அமையும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது: இந்தியா, பாகிஸ்தான் அல்லது இலங்கை என எந்த அணியாக இருந்தாலும், அந்த அணிகளில் உள்ள பந்துவீச்சாளர்கள் 10 ஓவர்கள் வீசுகிறார்களாக இல்லையா என்பதை கண்டுபிடித்து விடலாம். தற்போது பந்துவீச்சாளர்கள் பெரும்பாலும் 4 ஓவர்கள் வீசுவதற்கு பழகி விட்டார்கள். இந்த ஆண்டு ஆசியக் கோப்பை 20 ஓவர் போட்டியாக அல்லாமல் 50 ஓவர் போட்டியாக நடத்தப்படுவதை நான் வரவேற்கிறேன். உண்மையில் இது ஒரு சிறந்த யோசனை. ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டியாக நடத்தப்படுவது உலகக் கோப்பை தொடருக்கு தயாராக உதவியாக இருக்கும். ஆசியக் கோப்பை ஒரு நீண்ட தொடர். ஒரு சில போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு செல்ல முடியாது. வீரர்களின் உடற்தகுதியை சோதிக்கும் தொடராக இது அமையும். ஆசியக் கோப்பையை வெல்வதற்கு அனைத்து அணிகளுக்கும் இடையில் கடும் போட்டி இருக்கும். இவர்கள்தான் வெல்வார்கள் என கணிக்க முடியாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.