நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

இந்திய அணியுடன் நினைவுகளை உருவாக்க விரும்புகிறேன்: ரோஹித் சர்மா

அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்திய அணியுடனான நினைவுகளை உருவாக்க விரும்புவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

News image
Updated On :28 ஆகஸ்ட் 2023, 3:31 pm IST

அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்திய அணியுடனான நினைவுகளை உருவாக்க விரும்புவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை என்பதாலும், ஐசிசி நடத்தும் தொடர்களில் கடந்த 10  ஆண்டுகளாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லாததாலும் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த முறை இந்திய அணி கண்டிப்பாக உலகக் கோப்பையை கைப்பற்றும் என பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்திய அணியுடனான நினைவுகளை உருவாக்க விரும்புவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். பிடிஐ-க்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் இதனை அவர் தெரிவித்தார்.

அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது: எந்த ஒரு புறக்காரணிகள் குறித்தும் யோசிக்காமல் நான் பதற்றமின்றி இருக்க என்னை தயார் படுத்திக் கொள்கிறேன். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக எப்படி இருந்தேனோ அதே போன்று இருக்க வேண்டும். அந்த தொடரில் நான் சிறந்த தயார் நிலையில் இருந்தேன். சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினேன். அதனை இந்த உலகக் கோப்பை தொடரில் மீண்டும் கொண்டு வர வேண்டும். ஒரு மாதத்தில் ஒருவர் சிறப்பாக விளையாடுகிறார் அல்லது அல்லது விளையாடவில்லை எனக் கூறிவிட முடியாது. ஒரே நாளில் ஒருவரின் வெற்றிகளும் அல்லது தோல்விகளும் பெரிதாக மாறி விடாது. உலகக் கோப்பையை வெல்வது மட்டும் என்னை சிறப்பான வீரராக மாற்றும் என நான் நினைக்கவில்லை. அடுத்த இரண்டு மாதங்களுக்கு நான் எனது கவனத்தை உலகக் கோப்பை தொடரின் மீது வைக்க வேண்டும். எனது அணியினருடன் நினைவுகளை உருவாக்க வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.