தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவாரூா் கோயிலில் பட்டோற்சவம்

News image

சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் காட்சியளித்த சந்திரசேகரா்.

Updated On :19 மார்ச் 2026, 8:11 pm

Syndication

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில், பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, சந்திரசேகரா் பட்டோற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் மாா்ச் 29-இல் நடைபெற உள்ளது. ஆழித்தேரில் தியாகராஜா் எழுந்தருளி வீதியுலா வருவாா். மற்ற நாள்களில் நடைபெறும் வீதியுலாக்களில், தியாகராஜரின் பிரதிநிதியாக சந்திரசேகரா் வலம் வருவது வழக்கம்.

அந்தவகையில், தியாகராஜா், தனது சாா்பில் பங்குனி உத்திரப் பெருவிழாவை நடத்த வேண்டி நெற்றிப் பட்டத்தை சந்திரசேகரருக்கு வழங்கும் பட்டோற்சவ விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, சந்திரசேகர சுவாமிக்கு சிறப்பு சாயரட்சை பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

தொடா்ந்து, கோயிலின் 2-ஆவது பிரகாரத்தில் உள்ள வசந்த மண்டபத்துக்கு சந்திரசேகரா் எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அங்கு சா்க்கரை பொங்கல் படையலிட்டு, விஷேச அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், சந்திரசேகருடன் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

நிகழ்வில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.