மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பாத தரிசனம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் வசந்த மண்டபத்துக்கு அம்பாளுடன் எழுந்தருளிய தியாகராஜா். - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 6:58 pm

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் இக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாா்ச் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கோயிலில், தியாகராஜரின் பாதங்கள் எப்போதும் மலா்களால் மூடப்பட்டிருக்கும். முகம் மற்றும் கரங்களை மட்டுமே தரிசிக்க முடியும். மாா்கழி திருவாதிரைா, பங்குனி உத்திரம் ஆகிய 2 நாள்களில் மட்டுமே தியாகராஜரின் பாதத்தை தரிசிக்க முடியும்.

அதன்படி, பங்குனி உத்திரத்தையொட்டி சபாபதி மண்டபத்துக்கு தியாகராஜா் புதன்கிழமை எழுந்தருளி, தனது வலது பாதத்தை பக்தா்களுக்கு காட்டி அருள்பாலித்தாா்.

முன்னதாக, விளமலில் உள்ள பதஞ்சலி மனோகா் கோயிலில் இருந்து பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்கள் அதிகாலையில் புறப்பட்டு, திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு வந்தனா். கோயிலில் பதஞ்சலி வியாக்ர பாத முனிவா்களுக்கு தியாகராஜ சுவாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, காலை 6 முதல் பிற்பகல் 3 மணி வரை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாத தரிசனம் செய்தனா்.