பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ஆசியக் கோப்பை: முதல் இரு போட்டிகளிலிருந்து விலகிய கே.எல்.ராகுல்!

காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் ஆசியக் கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2023, 10:20 am

காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் ஆசியக் கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.

ஆசியக் கோப்பை தொடர் நாளை (ஆகஸ்ட் 30) முதல் தொடங்கவுள்ளது. காயம் காரணமாக நீண்ட நாள்கள் அணியில் இடம்பெறாமல் இருந்த கே.எல்.ராகுல் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் ஆசியக் கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளதாக கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது: கே.எல்.ராகுல் கடந்த சில மாதங்களாக தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படவில்லை. கே.எல்.ராகுல் எங்களுடன் ஒருவாரம் பயிற்சியில் ஈடுபட்டார். அவர் காயத்திலிருந்து முன்னேறி சிறப்பாக விளையாடுகிறார்.ஆனால், தற்போது அவர் காயத்தினால் ஏற்பட்ட சிறு தொந்தரவு காரணமாக ஆசியக் கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவர் பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமியில் இருப்பார். செப்டம்பர் 4-ஆம் தேதி நாங்கள் அவரது காயத்தின் தன்மையை மீண்டும் ஆராய்ந்து அவரை அணியில் இணைய செய்வோம். எல்லாம் சரியாக உள்ளது. அவர் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெற மாட்டார் என்றார்.

இந்திய அணி செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானையும், செப்டம்பர் 4-ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது போட்டியில் நேபாளத்தையும் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.