
இந்தியா-இலங்கை இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ராஜ்கோட்டில் சனிக்கிழமை (ஜன.7) இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது.
முதலில் ஆடிய இந்தியா 228/5 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய இலங்கை 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பேட்டா் சூர்யகுமாா் யாதவின் அதிரடி சததத்தால், இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில் 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரையும் 2-1 என கைப்பற்றியது இந்தியா.
சூர்யகுமாா் யாதவ் 51 பந்துகளில் 9 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 112 ரன்களை விளாசி இறுதி வரை களத்தில் இருந்தாா். வெறும் 26 பந்துகளில் சூர்யகுமாா் 50 ரன்களைக் கடந்தாா். இது சூர்யகுமாரின் 3-ஆவது டி20 சதமாகும். தொடக்க வீரராக களமிறங்காமல் இத்தனை சதமடித்த முதல் வீரரும் இவரே. நேற்று (ஜனவரி 7) சூர்யகுமார் அடித்த ஒவ்வொரு ஷாட்டுகளையும் கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள். சூர்யாவின் அதிரடியான சதத்தினை கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.