இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என வென்றது இந்திய அணி. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் குவாஹட்டியில் இன்று நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஷனகா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தீக்ஷனாவுக்குப் பதிலாக துனித் இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் ஷமி, சிராஜ், உம்ரான் மாலிக் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. விராட் கோலி தனது 45-வது ஒருநாள் சதத்தை எடுத்தார். 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரோகித்- 83, கில்- 70, கே.எல்.ராகுல்-39.
பின்னர் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களுக்கு 306 ரன்கள் எடுத்தது. பதும் நிஷாங்கா 72 ரன்கள் எடுத்தார். ஆனால் பின்னர் ஆடிய இலங்கை வீரர்கள் பார்ட்னர்ஷிப் அமைக்காமல் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இலக்கை கேப்டன் தசுன் ஷானகா தனியாளாக நின்று விளையாடினார்.
88 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடக்கம். ஆனால் இவரது போராட்டம் வீணானது. 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் மட்டுமெ இலங்கை அணியினால் எடுக்க முடிந்தது.
67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகள், சிராஜ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இந்திய அணி இந்த தொடரை 1-0 என முன்னிலை வகிக்கிறது.