தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நியூசி. எதிராக ‘மிடில் ஆர்டரில்’ களமிறங்கும் இஷான் கிஷன்!

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் களமிறக்கப்படுவார் என்று கேப்டன் ரோஹித் சர்மா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

இஷான் கிஷன்

Updated On :17 ஜனவரி 2023, 9:14 pm IST

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் களமிறக்கப்படுவார் என்று கேப்டன் ரோஹித் சர்மா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர், நாளை முதல் (ஜனவரி 18) தொடங்குகிறது. முதல் ஒருநாள் ஆட்டம், ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இதற்கிடையே இந்திய அணியின் முக்கிய பேட்டரான ஷ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் சர்மா, ஷ்ரேயஸ் ஐயர் போட்டியிலிருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் களமிறங்குவார் என்று தெரிவித்தார்.

மேலும், ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில் முதல் இடத்திற்கு முன்னேறும்.

ஏற்கெனவே டி20 தரவரிசையில் முதலிடத்திலும் டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்திலும் இந்திய அணி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.