பஞ்சாப் பேட்டிங் தேர்வு: ராஜபக்‌ஷா அணியில் சேர்ப்பு! 

கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 
பஞ்சாப் பேட்டிங் தேர்வு: ராஜபக்‌ஷா அணியில் சேர்ப்பு! 

ஐபிஎல்-இன் 53வது போட்டியாக புள்ளிப் பட்டியலில் 7,8வது முறையே இருக்கும் பஞ்சாப், கொல்கத்தா அணிகள் இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சை செய்கிறது. இந்தப் போட்டியில் பஞ்சப வென்றால் 3வது இடத்துக்கு முன்னேறும். கேகேஆர் நல்ல ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் 4வது இடத்திற்கு போக வாய்ப்புள்ளது. 

டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

இந்த முறை ஐபிஎல் போட்டிகள் எல்லா அணிகளும் நன்றாக விளையாடுவதால் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக இனிவரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானதாக மாறி வருகிறது. 

இரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் கொல்கத்தா 20 முறையும் பஞ்சாப் அணி 11 முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கேகேஆர் அணியில் மாற்றங்கள்: மாற்றங்கள் இல்லை. 

பஞ்சாப் அணியில் மாற்றங்கள்: ஷார்ட்க்கு பதிலாக பனுகா ராஜபக்‌ஷா சேர்க்கப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com