முக்கியப் போட்டியில் வெற்றி பெற ராஜஸ்தானுக்கு 172 ரன்கள் இலக்கு! 

டாஸ் வென்று பேட்டிங் விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 171/5 ரன்கள் எடுத்துள்ளது. 
முக்கியப் போட்டியில் வெற்றி பெற ராஜஸ்தானுக்கு 172 ரன்கள் இலக்கு! 

ராஜஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 171/5 ரன்கள் எடுத்துள்ளது.

கோலி 18 ரன்களில் ஆட்டமிழக்க டு பிளெஸ்ஸி- மேக்ஸ்வெல் ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள். டு  பிளெஸ்ஸி 55 ரன்களும், மேக்ஸ்வெல் 54 ரன்களும் எடுத்தனர். இறுதியில் அனுஜ் ராவத் 11 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அசத்தினார். 

ஆர்சிபி அணி சார்பாக ஆடம் ஜாம்பா, கே.எம்.ஆசிப் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். 

புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி 12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டியில் ஆர்சிபி வென்றாக வேண்டும். இல்லையென்றால் ப்ளே-ஆஃப்க்கு தகுதி பெற முடியாது. அதே நிலைமைதான் ராஜஸ்தான் அணிக்கும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com