தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
உலகக்கோப்பை தொடரின் 37வது லீக் ஆட்டம் இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இதையும் படிக்க: 60 மாணவிகளை மிரட்டி பாலியல் அத்துமீறல்: பள்ளி முதல்வர் கைது!
நடப்பு உலகக்கோப்பை தொடரில் அசைக்க முடியாத ஒரே அணியாக இந்தியா வலம் வருகிறது. இதுவரை ஆடிய 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணி விளையாடிய 7 போட்டிகளில் 6-ல் வென்று இரண்டாமிடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளுமே ஏற்கனவே அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.