அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

இவர் விக்கெட்டை வீழ்த்தி ரசிகர்களை அமைதியாக்கியதில் மகிழ்ச்சி: ஆஸ்திரேலிய கேப்டன்

விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்தி மைதானத்தில் உள்ள ரசிகர்களை அமைதியாக்கியது மிகுந்த திருப்தியளித்ததாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :20 நவம்பர் 2023, 11:02 am

விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்தி மைதானத்தில் உள்ள ரசிகர்களை அமைதியாக்கியது மிகுந்த திருப்தியளித்ததாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாதில் நேற்று (நவம்பர் 19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த 5-வது கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் பாட் கம்மின்ஸ்.

இறுதிப்போட்டிக்கு முன்னதாக, மைதானத்தில் இந்திய ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு என பாட் கம்மின்ஸ் கூறியிருந்தார். அவர் கூறியதுபோலவே போட்டியின்போது ரசிகர்கள் அமைதியில் உறைந்துவிட்டார்கள் என்றே கூறலாம். 

போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் பேசியதாவது: நான் இதனை கண்டிப்பாக கூறியே ஆக வேண்டும். நான் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை அதிகமாக விரும்புகிறேன். இந்த உலகக் கோப்பை வெற்றி பெற்றதும் கூட நான் இவ்வாறு கூறுவதற்கு காரணமாக இருக்கலாம். உலகக் கோப்பை தொடர் இருதரப்பு தொடர் போன்றது கிடையாது. இது ஒரு நீண்ட தொடர். கடந்த இரண்டு மாதங்களாக நிறைய நினைவுகள் எங்களுக்கு கிடைத்தது.

அணியில் உள்ள வீரர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரும் பல விஷயங்களைத் தியாகம் செய்துள்ளனர். டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடினார். மைதானத்தில் ரசிகர்கள் அனைவரும் இந்திய அணிக்கு ஆதரவாக இருப்பார்கள் எனத் தெரியும். விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்தி அவர்களை அமைதியாக்கியது எனது கிரிக்கெட் பயணத்தில் அமைந்த மிக சிறப்பான தருணம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.