
பிரபல ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையை அவமதித்தாக இந்தியர்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.
மிகவும் எதிர்பார்த்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. இதனால் இந்தியர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்கள் .

உலக சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணிக்கு, வெற்றிக் கோப்பையுடன் ரூ.33 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. ரன்னா் அப்-ஆக வந்த இந்திய அணிக்கு ரூ.16 கோடி கிடைத்தது.
இதையும் படிக்க: அனிமல் படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு!

கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய வீரர்கள் வெற்றி மகிழ்ச்சியில் புகைப்படங்கள் எடுத்து கொண்டாடினர். அதில் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையின் மீது கால் நீட்டியவாறு இருக்கும் புகைப்படத்தினை பாட் கம்மின்ஸ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில பகிர்நதிருந்தார்.

படம்: இன்ஸ்டாகிராம் | பாட் கம்மின்ஸ் ஸ்டோரியில் இருந்து...
இதனைக் கண்ட சில இந்திய ரசிகர்கள் உலகக் கோப்பையை மிட்செல் மார்ஷ் அவமதித்து விட்டாரென இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#ShameOnYou #Mitchelmarsh and @CricketAus . Such a disgusting thing that he put his legs on @cricketworldcup . Such a shame. Take some action against them @ICC . He would have respected the cup. Such a shameless behavior by him..#ICCCricketWorldCup #ICC #MitchellMarsh pic.twitter.com/VLNyBOlMOd
â _ASKRO (@_AskRO) November 20, 2023
சிலர் அது ஒரு கோப்பை மட்டுமே. ஆணவமல்ல. அது அவர்களின் ஆதிக்கம். தேவையில்லாமல் இதை பிரச்னை ஆக்க வேண்டாமெனவும் மார்ஷுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
This is dominance,not disrespectful.#MitchellMarsh pic.twitter.com/BKEtrEfAvG
â Vishal Aaryan (@vishals32060100) November 20, 2023
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





