ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி!

டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக தனியார்  மருத்துவமனையில் கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக தனியார்  மருத்துவமனையில் கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஷுப்மன் கில் நலமுடன் இருப்பதாகவும் ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.அவருடைய உடலில் தட்டணுக்கள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா உடனான உலகக் கோப்பை போட்டியை விளையாட சென்னை வந்த அவர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில், அணியில் இடம்பெறாத ஷுப்மன் கில் ஆப்கானிஸ்தானுடனான போட்டியிலும் பங்கேற்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com