டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஷுப்மன் கில் நலமுடன் இருப்பதாகவும் ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.அவருடைய உடலில் தட்டணுக்கள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா உடனான உலகக் கோப்பை போட்டியை விளையாட சென்னை வந்த அவர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: பால் நிறுவனத்தில் விபத்து: ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்கள் நாசம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில், அணியில் இடம்பெறாத ஷுப்மன் கில் ஆப்கானிஸ்தானுடனான போட்டியிலும் பங்கேற்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.