இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் நேற்று மோதின. இதில், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்களை பாகிஸ்தான் குவித்தது. அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 122, சதீரா சமரவிக்ரமா 108 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 48.2 ஓவர்களில் 345 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 131(நாட் அவுட்), அப்துல்லா ஷஃபிக் 113 ரன்கள் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
மேலும், உலகக் கோப்பையின் 48 ஆண்டுகால வரலாற்றில் அதிகபட்ச ரன்னை சேஸ் செய்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.