முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆப்கானிஸ்தான் வீரர்!

ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில்  ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முகமது நபி மாறியுள்ளார்.

News image
Updated On :16 அக்டோபர் 2023, 5:29 pm IST

ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில்  ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முகமது நபி மாறியுள்ளார்.

உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் முகமது நபி இந்த சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்த உலகக் கோப்பையில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது. 

இந்தப் போட்டியில் 6 ஓவர்கள் வீசிய ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி வெறும் 16 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம், ஆப்கானிஸ்தான் அணிக்காக 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்தார். இதுவரை அவர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் மொத்தமாக 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

முன்னதாக ஆப்கானிஸ்தான் வீரர் டாலட் ஸ்த்ரன் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். இந்தப் பட்டியலில் 11 விக்கெட்டுகளுடன் ரஷித் கான் 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.