உலகக் கோப்பையின் 15வது போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.
கடந்த அக்.5ஆம் தேதி முதல் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகள் நடந்து வருகின்றன. தொடரில் 15வது போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.
மழையின் காரணமாக போட்டி தாமதமாக ஆரம்பமாகியுள்ளது. மீண்டும் மழை பெய்ததால் 43 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க அணியில் ஷம்ஸிக்குப் பதிலாக கோட்ஜே அணியில் இடம்பெற்றுள்ளார். 2 போட்டிகளில் விளையாடியுள்ள தெ.ஆ. 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் நெதர்லாந்து 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.