அயர்லாந்து-இந்தியா இடையிலான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பும்ரா தலைமையிலான இளம் இந்திய அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதல் இரு டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருப்பதாவது: இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. மூன்றாவது போட்டிக்கான டிக்கெட்டுகளும் வேகமாக விற்று வருகின்றன எனக் கூறப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3 டி20 போட்டிகளும் அயர்லாந்தின் தி வில்லேஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் உள்ள மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 11,500 ஆகும்.
இதுவரை அயர்லாந்துக்கு எதிராக 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி ஒரு முறை கூட தோல்வியடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைது!

தீபாவளி வெளியீடாக சூர்யா - 47?

ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


