25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

இந்தியா-அயர்லாந்து டி20 தொடர்: விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!

அயர்லாந்து-இந்தியா இடையிலான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம் | ட்விட்டர்

Published On :2 பிப்ரவரி 2024, 8:20 am IST

அயர்லாந்து-இந்தியா இடையிலான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பும்ரா தலைமையிலான இளம் இந்திய அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதல் இரு டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருப்பதாவது: இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. மூன்றாவது போட்டிக்கான டிக்கெட்டுகளும் வேகமாக விற்று வருகின்றன  எனக் கூறப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 டி20 போட்டிகளும் அயர்லாந்தின் தி வில்லேஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் உள்ள மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 11,500 ஆகும். 

இதுவரை அயர்லாந்துக்கு எதிராக 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி ஒரு முறை கூட தோல்வியடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.