நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

என் குடும்பத்துக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க நினைக்கிறேன்: மனம் திறந்த ரிங்கு சிங்

எனது பெற்றோருக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்ற எனது ஆசை, பல கடினமான சூழலைக் கடந்து இந்திய அணியில் தன்னை இடம்பிடிக்க செய்ததாக ரிங்கு சிங் மனம் திறந்துள்ளார்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2023, 5:15 pm IST

எனது பெற்றோருக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்ற எனது ஆசை, பல கடினமான சூழலைக் கடந்து இந்திய அணியில் தன்னை இடம்பிடிக்க செய்ததாக ரிங்கு சிங் மனம் திறந்துள்ளார்.

பும்ரா தலைமையிலான இளம் இந்திய அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.  அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார். 

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ஜியோ சினிமா சார்பில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரிங்கு சிங், எனது பெற்றோருக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்ற எனது ஆசை, பல கடினமான சூழலைக் கடந்து இந்திய அணியில் தன்னை இடம்பிடிக்க செய்ததாக மனம் திறந்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது: இந்திய அணியில் சேர்க்கப்படுவதற்காக நிறைய கடினமான காலங்களை கடந்து வந்துள்ளேன். பொருளாதார ரீதியில் ஆதரவு கிடைக்காமல் பெரும் சிரமத்துக்கு ஆளானேன். எனது மனதுக்குள் ஒரு விஷயம் மட்டும் அணையாமல் தீராத ஆசையாக எரிந்து கொண்டே இருந்தது. எனது குடும்பத்துக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்ற எனது ஆசை என்னை  இந்திய அணியில் இடம்பெற செய்தது.  எனது தன்னம்பிக்கை என்னை வலிமையானவராக மாற்றி இந்தப் பயணத்தில் உதவியது. 

இந்திய அணியில் நான் சேர்க்கப்பட்டது எனது குடும்பத்துக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்திய அணியில் நீ இடம் பெற வேண்டுமென்றால் உன்னால் எவ்வளவு கடினமாக உழைக்க முடியுமோ அந்த அளவுக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என எப்போதுமே எனது அம்மா கூறுவார். எனது குடும்பத்தினரின் கனவு இன்று நனவாகியுள்ளது. நான் அவர்களது கனவில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனது குடும்பம் பொருளாதார ரீதியில் கஷ்டப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்களை ஏழ்மையிலிருந்து வெளியே கொண்டு வந்து அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க நினைக்கிறேன் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.