தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

என் குடும்பத்துக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க நினைக்கிறேன்: மனம் திறந்த ரிங்கு சிங்

எனது பெற்றோருக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்ற எனது ஆசை, பல கடினமான சூழலைக் கடந்து இந்திய அணியில் தன்னை இடம்பிடிக்க செய்ததாக ரிங்கு சிங் மனம் திறந்துள்ளார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:21 am IST

எனது பெற்றோருக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்ற எனது ஆசை, பல கடினமான சூழலைக் கடந்து இந்திய அணியில் தன்னை இடம்பிடிக்க செய்ததாக ரிங்கு சிங் மனம் திறந்துள்ளார்.

பும்ரா தலைமையிலான இளம் இந்திய அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.  அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார். 

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ஜியோ சினிமா சார்பில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரிங்கு சிங், எனது பெற்றோருக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்ற எனது ஆசை, பல கடினமான சூழலைக் கடந்து இந்திய அணியில் தன்னை இடம்பிடிக்க செய்ததாக மனம் திறந்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது: இந்திய அணியில் சேர்க்கப்படுவதற்காக நிறைய கடினமான காலங்களை கடந்து வந்துள்ளேன். பொருளாதார ரீதியில் ஆதரவு கிடைக்காமல் பெரும் சிரமத்துக்கு ஆளானேன். எனது மனதுக்குள் ஒரு விஷயம் மட்டும் அணையாமல் தீராத ஆசையாக எரிந்து கொண்டே இருந்தது. எனது குடும்பத்துக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்ற எனது ஆசை என்னை  இந்திய அணியில் இடம்பெற செய்தது.  எனது தன்னம்பிக்கை என்னை வலிமையானவராக மாற்றி இந்தப் பயணத்தில் உதவியது. 

இந்திய அணியில் நான் சேர்க்கப்பட்டது எனது குடும்பத்துக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்திய அணியில் நீ இடம் பெற வேண்டுமென்றால் உன்னால் எவ்வளவு கடினமாக உழைக்க முடியுமோ அந்த அளவுக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என எப்போதுமே எனது அம்மா கூறுவார். எனது குடும்பத்தினரின் கனவு இன்று நனவாகியுள்ளது. நான் அவர்களது கனவில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனது குடும்பம் பொருளாதார ரீதியில் கஷ்டப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்களை ஏழ்மையிலிருந்து வெளியே கொண்டு வந்து அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க நினைக்கிறேன் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.