குடிநீர் விநியோகம் தொடர்பான பணிகளுக்காக ராஜஸ்தானின் ஜோத்பூர் நகருக்கு ரூ.62.28 கோடி ஒதுக்கி அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: எந்த ஒரு சிரமமின்றி அனைவருக்கும் குடிநீர் விநியோகம் செய்யும் பணியில் அரசு தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. பல்வேறு குடிநீர் விநியோகம் தொடர்பான பணிகளுக்காக முதல்வர் ரூ.62.28 கோடி ஒதுக்கியுள்ளார். இதன்மூலம் புதிதாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு ஜோத்பூரின் லுனி பகுதிக்கு குடிநீர் விநியோகம் கிடைக்க வழிவகை செய்யப்படும். ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள பழைய குடிநீர் விநியோக குழாய்கள் ரூ.38.93 கோடி செலவில் விரிவுப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: உத்யான் விரைவு ரயிலில் தீ விபத்து!
நீர்ப்பாசன திட்டத்துக்காக ரூ.33.95 கோடி ஒதுக்க முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.