மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட பயிற்சி தேவை: ரிங்கு சிங்

தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் விளையாடுவதற்கு அதிக பயிற்சி தேவைப்படுவதாக இந்திய அணியின் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :9 டிசம்பர் 2023, 10:56 am

DIN

தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் விளையாடுவதற்கு அதிக பயிற்சி தேவைப்படுவதாக இந்திய அணியின் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி  தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும்  2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் டி20 தொடர் நாளை (டிசம்பர் 10) தொடங்குகிறது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் விளையாடுவதற்கு அதிக பயிற்சி தேவைப்படுவதாக இந்திய அணியின் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் தென்னாப்பிரிக்காவின் ஆடுகளத்தில் இன்று பேட் செய்தேன். பந்தின் வேகம் அதிகமாக உள்ளது. அதேபோல பந்துகள் அதிக அளவில் பௌன்சர்களாக வருகின்றன. இந்த ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப கூடுதல் பயிற்சி தேவைப்படுகிறது. தென்னாப்பிரிக்க ஆடுகளத்தில் என்னுடைய முதல் பயிற்சியில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். ராகுல் டிராவிட் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எனக்கு அறிவுரை கூறினார். ராகுல் டிராவிட்டுடன் இணைந்து பயணிக்க கிடைத்த வாய்ப்பு சிறப்பான உணர்வைக் கொடுக்கிறது என்றார்.

இந்தியாவில் நடைபெற்ற  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றுவதற்கு ரிங்கு சிங்  தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.