ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை அறிவித்த தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன்!

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 7:00 pm IST

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில், வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. 

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை சரியான இடத்தில் முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில், முதல் போட்டி எல்கரின் சொந்த மண்ணான செஞ்சூரியனில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி அவர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கேப் டவுன் மைதானத்தில் நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளது.

ஓய்வு முடிவு குறித்து டீன் எல்கர் கூறியதாவது: தென்னாப்பிரிக்க அணிக்காக 12 ஆண்டுகளாக விளையாட கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன். இத்தனை ஆண்டுகள் பயணம் சிறப்பானதாக அமைந்தது. அனைத்து சிறப்பான விஷயங்களும் ஒரு நாள் முடிவுக்கு வரும். இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டெஸ்ட் தொடர் எனது கடைசி சர்வதேசப் போட்டியாக இருக்கும். இந்த அழகான போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக முடிவெடுத்துள்ளேன். கிரிக்கெட் எனக்கு நிறைய விஷயங்களைக் கொடுத்துள்ளது. கேப் டவுனில் நடைபெறும் டெஸ்ட் போட்டியே எனது கடைசி போட்டி. கேப் டவுன் மைதானம் எனக்கு மிகவும் பிடித்த மைதானம். என்னுடைய முதல் டெஸ்ட் ரன்கள் இந்த மைதானத்திலிருந்துதான் வந்தது. எனது கடைசி டெஸ்ட் ரன்களும் இந்த மைதானத்தில் இருந்துதான் வரப்போகிறது என்றார். 

தென்னாப்பிரிக்க அணிக்காக 84 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டீன் எல்கர் 5,146 ரன்கள் குவித்துள்ளார். அதில் 13 சதங்கள் மற்றும் 23 அரைசதங்கள் அடங்கும். 19 டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியை கேப்டனாக வழிநடத்தி அதில் 9 வெற்றிகளை எல்கர் பெற்றுத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.