
காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ள முகமது ஷமிக்குப் பதிலாக யார் அணியில் சேர்க்கப்பட்டாலும் அவர்கள் தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிப்பார்கள் என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று (டிசம்பர் 26) தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி விலகினார்.
இந்த நிலையில், காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ள முகமது ஷமிக்குப் பதிலாக யார் அணியில் சேர்க்கப்பட்டாலும் அவர்கள் தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிப்பார்கள் என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி ஒரு மிகச் சிறந்த வீரர். அவருக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டும் என எங்களில் பலர் நினைப்போம். முகமது ஷமி மட்டுமின்றி அவரது இடத்தில் எந்த ஒரு பந்துவீச்சாளர் இடம்பெற்றாலும் அவர்கள் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக பந்துவீசுவார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.