தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரஞ்சி கோப்பை: காலிறுதியில் சௌராஷ்டிரா அசத்தல் வெற்றி! 

பஞ்சாபிற்கு எதிரான கடைசிநாள் ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்தில் சௌராஷ்டிரா அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தேர்வானது. 

News image

படம்: ட்விட்டர் | IDCF

Updated On :4 பிப்ரவரி 2023, 10:18 am

DIN

ரஞ்சி கோப்பை அரையிறுதிக்கு நடப்பு சாம்பியன் மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், கா்நாடக அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் பஞ்சாபை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழத்தி சௌராஷ்டிரா அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது.  

காலிறுதியில் பஞ்சாப்-சௌராஷ்டிர அணிகள் ஆடின. கடைசி நாளான சனிக்கிழமை பஞ்சாப் அணி வெற்றி பெற 200 ரன்கள் தேவைப்படுகிறது. அதே நேரம் சௌராஷ்டிர அணிக்கு 8 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில் உள்ளது. ஸ்கோா்: சௌராஷ்டிரா 303, 379, 

பஞ்சாப் முதல் இன்னிங்ஸ் 431, இரண்டாவது இன்னிங்ஸ் 180.பஞ்சாப் அணியில் கேப்டன் மந்தீப் சிங் விக்கெட் இழந்ததும் அணி நிலைக்குழைந்த்து. அவ்ர அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். 

 5 விக்கெட்டுகள் எடுத்த பாரத் புட். 

 5 விக்கெட்டுகள் எடுத்த பாரத் புட். 

சௌராஷ்டிரா அணியில் பார்த் புட் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை எடுத்தார். தர்மேந்திர சிங் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், யுவ்ராஜ்சிங் தோதியா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.