இந்தியா ஆஸி. அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடா் நாகபுரியில் 9-ஆம் தேதி தொடங்குகிறது. ஆஷஸ் கோப்பை தொடா் போல், ஆஸி.-இந்திய அணிகளுக்கு இடையே பாா்டா்-கவாஸ்கா் கோப்பை போட்டி கௌரவமிக்கதாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஆஸி.கைப்பற்றி 19 ஆண்டுகள் ஆகின்றது குறிப்பிடத்தக்கது.
ரவி அஸ்வின் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனாமாக இருந்து வருகிறார். அவரைப் போலவே பந்து வீசும் நபரைக் கொண்டு வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தது சமூகவலைதளத்தில் மிகவும் வைரலானது. அந்தளவுக்கு தமிழக வீரர் அஸ்வினின் பந்து வீச்சு திறன் உள்ளது.
இதையும் படிக்க: 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த பாகிஸ்தான் வீரர்! (விடியோ)
இந்நிலையில் ஆஸி.யின் பிரபல தொடக்க பேட்டர் உஸ்மான் கவாஜா நேர்காணல் ஒன்றில் கூறியதாவது:
அஸ்வின் ஒரு துப்பாக்கி மாதிரியான வீரர். மிகவும் திறமைசாலி. சிறிய சிறிய அதிகமான வேறுபாடுகள் உடைய பந்து வீச்சாளர். கிறிஸை நன்றாக உபயோகப்படுத்தும் பந்து வீச்சாளர். ஒரு ஆஃப்-ஸ்பின்னரை எப்படி விளையாட வேண்டுமென முன்னர் கேட்டிருந்தால் எனக்கு தெரிந்திருக்காது. ஆனால் இப்போது தேவையான அளவிற்கு கற்றுக்கொண்டுள்ளேன்.
ஆடுகளத்தில் பந்து திரும்பும். அது முதல் நாளிலா, 2வது நாளிலா தெரியாது. அவர் அதிகமான ஓவர்களை வீசுவார். நிச்சயமாக இது நல்ல சவாலாக இருக்கும். அவர் எப்படி பந்து வீசினாலும் நான் அவரை எப்படி விளையாடப் போகிறேன், ரன்கள் குவிக்கப்போகிறேன் என்பதே முக்கியம். அவரை அதிக நேரம் விளையாடினால் அவர் நிச்சயமாக அவரது திட்டங்களை மாற்றுவார்.
இந்தியா போன்ற துணைக்கண்டத்தில் தொடக்க வீரராக விளையாடுவது எளிதானதென பலரும் நினைக்கிறார்கள்.ஆனால் புதியப் பந்தில் ஸ்பின் மற்றும் மாறுபாடுகள் அதிகமாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - பிஇ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பு!

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா..?- உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை

காமன்வெல்த்தில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற மீராபாய் சானு - புகைப்படங்கள்







