இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மோசமான தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னருக்குப் பதிலாக டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: 4 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்!
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 1 ரன்னிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அவர் வெளிநாட்டு ஆடுகளங்களில் விளையாடும்போது அவருடைய மோசமான ஃபார்மே தொடர்கிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளிக்காததால் பெரிய அளவிலான ஸ்கோரை ஆஸ்திரேலியாவால் எடுக்க முடியவில்லை.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களுக்கும் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்கள் எடுத்ததே இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி எடுத்த மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.
இதையும் படிக்க: ‘திருச்சிற்றம்பலம்’ பட இயக்குநரின் அடுத்த படம் குறித்த அப்டேட்!
முதல் டெஸ்டில் டேவிட் வார்னர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தத் தவறியதால் அவருக்குப் பதிலாக டிராவிஸ் ஹெட்டினை அணியில் சேர்ப்பதற்கான ஆலோசனை நடந்து கொண்டிருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இடது கை சுழற்பந்து வீச்சாளரான மேட் குன்மேன் அணியில் இடம் பிடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி தில்லியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காட்டு யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க பாடந்தொரை பகுதியில் 2 கும்கிகள் வரவழைப்பு

விவசாயக் கண்மாய்களை ஆழப்படுத்த வேண்டும்! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
மாணவா்கள் மீது தடியடி, துப்பாக்கிச்சூடு! நாடாளுமன்றத்தில் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும்: காா்கே வலியுறுத்தல்

சேலம் வழியாக சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



