திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஹர்திக் பாண்டியா என்னை விட சிறப்பாக விளையாடுகிறார்: வெங்கடேஷ் ஐயர்

ஹர்திக் பாண்டியா தன்னைவிட சிறப்பாக விளையாடி வருவதால் இந்திய அணியில் இடம்பிடிக்க கடினமாக உழைக்க வேண்டுமென வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார்.

News image
Updated On :1 ஜூலை 2023, 12:14 pm IST

இந்திய ஒருநாள் அணிக்கு சிறந்த ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு ஜடேஜாவுக்கு அடுத்து ஹார்திக் பாண்டியாதான் எல்லோரது தேர்வும்.

2018இல் ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டது. பின்னர் 2022இல் காயம் குணமாகி விளையாட வந்தார். ஐபிஎல் போட்டியில் புதிய அணியான குஜராத் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்றார். 2023 ஐபில் போட்டியில் இறுதிப் போட்டி வரை சென்று சிஎஸ்கே அணியிடம் தோற்றார்.

இதற்கிடையில் வெங்கடேஷ் ஐயர் சிறந்த ஆல்ரவுண்டராக ஐபிஎல் போட்டிகளில் மிளிர ஆரம்பித்தார். தற்போது மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ள ஹர்திக் பாண்டியா ஒருநாள் உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை போட்டிகளில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வெங்கடேஷ் ஐயர் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது:

ஹர்திக் பாண்டியா நல்ல திறமைசாலி. நான் இந்திய அணியில் இடம் பிடிக்க அவரைப் போல் சிறப்பாக விளையாட வேண்டும். இப்போது அவருக்கு அருகில் நான் இல்லை என்பதுதான் நேர்மையான உண்மை. ஆனால் நான் கடினமாக உழைத்து வருகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.