அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

106 மீட்டருக்கு சிக்ஸர் அடித்த ப்ராவோ! (விடியோ) 

பிரபல கிரிக்கெட் வீரர் டிவைன் ப்ராவோ 106 மீ. தூரம் சிக்ஸர் அடித்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

News image

படம்: ட்விட்டர் | டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்

Updated On :17 ஜூலை 2023, 4:47 pm IST

எம்எல்சி எனப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் ஜூலை 13 முதல் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் அணிகளும் 3 அணிகளை விலைக்கு வாங்கி விளையாடுகிறது. அதில் சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகள் முறையே டிஎஸ்கே (டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்), எம்ஐஎன்ஒய் (மும்பை இந்தியன்ஸ் நியூயார்க்), எல்ஏகேஆர் (லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்) ஆகிய அணிகள் விளையாடுகின்றன. 

மேலும் அமெரிக்காவினை சேர்ந்த 3 அணிகளுமாக மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன.  

இதில் டிஎஸ்கே அணிக்காக சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் டிவைன் ப்ராவோ விளையாடுகிறார். முதல் போட்டியில் அபாரமாக வென்ற டிஎஸ்கே தனது 2வது போட்டியில் வாஷிங்டன் ப்ரிடம் அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தேல்வியுற்றது.

இந்தப் போட்டியில் டிஎஸ்கே தோல்வியுற்றாலும் ப்ராவோ அற்புதமாக விளையாடினார். இதில் 39 பந்துகளுக்கு 76 ரன்கள் அடித்து விளாசினார். அதிலும் நோர்க்யா ஓவரில் 10 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அசத்தினார். 

17.2 ஓவரில் நோர்க்யா வீசிய பந்தில் 106 மீ. தூரம் சிக்ஸரும் அடித்து அசத்தினார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.