தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

எனது மனைவிக்கு என்னைவிட இவரைத்தான் பிடிக்கும்: ஸ்டூவர்ட் பிராட் 

பிரபல இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் அவரது மனைவிக்கு பிடித்த வீரர்கள் பட்டியலில் தான் இரண்டாவது இடம் வகித்துள்ளதாக கூறியுள்ளார். 

Published On :

இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸி. அணி விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு நடைபெறும் ப்ரத்யேகமான டெஸ்ட் போட்டி ஆஷஸ் என அழைக்கப்படுகிறது. 2-1 என ஆஸி. முன்னிலை வகிக்கிறது. 

3வது போட்டியில் இங்கிலாந்து அணி மீண்டெழுந்துள்ளது. அணியில் 3 மாற்றங்களை செய்ததன் மூலம் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதில் கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக பந்து வீசி மற்றும் பேட்டிங்கிலும் அசத்தினார். 

இந்நிலையில்  ஸ்டூவர்ட் பிராட், “கிறிஸ் வோக்ஸ் அற்புதமான கிரிக்கெட்டர். எனது மனைவி மோலிக்கு அவர்தான் பிடித்தமான வீரரென கூறியுள்ளார். அதற்கு ‘நான் இல்லையா?’ எனக் கேட்டேன். அதற்கு எனது மனைவி, ‘நீங்கள் இரண்டாவதுதான்’ எனக் கூறினார். நான் ‘மிக்க நன்றி’ எனக் கூறினேன். இரண்டு உலகக் கோப்பை இறுதி போட்டிகளை வெல்ல உதவியவரே கிறிஸ் வோக்ஸ்தான். ஆனால் அதைவிடவும் 3வது ஆஷஸ் போட்டியில் அவரது சிறப்பான ஆல்ரவுண்ட் ஃபர்பாமென்ஸ் முக்கியனமான ஒன்றாகும்” எனக் கூறியுள்ளார். 

தீவிர பயிற்சியில் கிறிஸ் வோக்ஸ் 

தீவிர பயிற்சியில் கிறிஸ் வோக்ஸ் 

ஸ்டூவர்ட் பிராட் டெஸ்டில் 598 விக்கெட்டுகளும் கிறிஸ் வோக்ஸ் 136 விக்கெட்டுகளும் எடுத்துள்ளது குறிப்பிட்டத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.