விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களில் 5-வது இடத்துக்கு முன்னேறிய விராட் கோலி!

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி தென்னாப்பிரிக்க வீரர் ஜாக் காலிஸை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

News image
Updated On :22 ஜூலை 2023, 3:34 pm IST

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி தென்னாப்பிரிக்க வீரர் ஜாக் காலிஸை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டத்தின்போது அவர் இந்த சாதனையைப் படைத்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 438 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தனது 500-வது சர்வதேசப் போட்டியில் விளையாடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார். அவர் 206 பந்துகளில் 121 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது அசத்தலான சதம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் அவரை 5-வது இடத்துக்கு முன்னேறச் செய்தது. 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் தற்போது சச்சின் டெண்டுல்கர் (34,357 ரன்கள்), குமார் சங்ககாரா(28,016 ரன்கள்), ரிக்கி பாண்டிங் (27,483 ரன்கள்), மகேலா ஜெயவர்த்தனே(25,957 ரன்கள்) மற்றும் விராட் கோலி (25,548 ரன்கள்) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர். 

25,534 ரன்களுடன் 5-ஆம் இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்க வீரர் ஜாக் காலிஸை பின்னுத் தள்ளி விராட் கோலி 5-ஆம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.