ஆஷஸ் கடைசி டெஸ்ட்: உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து 130 ரன்கள் குவிப்பு!
By DIN | Published On : 29th July 2023 06:27 PM | Last Updated : 29th July 2023 06:27 PM | அ+அ அ- |

ஆஷஸ் கடைசி டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 130 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஆஷஸ் கடைசி டெஸ்ட் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நேற்று இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 295 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் கிரிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்டுவர்ட் பிராட், மார்க் வுட் மற்றும் ஜோ ரூட் தலா 2 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 295 ரன்கள் எடுத்ததால் ஆஸ்திரேலியா இங்கிலாந்தைக் காட்டிலும் 12 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளுக்கு ஏற்றவாறு பேட்டிங்கை மாற்றிக் கொள்வாரா சூர்யகுமார் யாதவ்?
இந்த நிலையில், இன்று (ஜூலை 29) மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். இருப்பினும், பென் டக்கெட் 42 ரன்களுக்கு ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, ஸாக் கிராலியுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய ஸாக் கிராலி அரைசதம் கடந்தார். உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து ஒரு விக்கெட்டினை இழந்து 130 ரன்கள் எடுத்துள்ளது. ஸாக் கிராலி 71 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 118 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...