நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆஷஸ் டெஸ்டில் புதிய சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்!

ஆஷஸ் டெஸ்டில் புதிய உலக சாதனை ஒன்றை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார்.

News image
Updated On :30 ஜூலை 2023, 6:50 pm IST

ஆஷஸ் டெஸ்டில் புதிய உலக சாதனை ஒன்றை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஆஷஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் மூன்றாம் நாளான நேற்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒரு ஆஷஸ் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியபோது பென் ஸ்டோக்ஸ் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். நேற்றையப் போட்டியில் அவர் அடித்த சிக்ஸர் இந்த உலக சாதனையைப் படைக்க உதவியது. இந்த ஆஷஸ் தொடர் முழுவதும் அவர் மொத்தமாக 15 சிக்ஸர்களை விளாசியுள்ளார். ஒரு ஆஷஸ் தொடரில் தனிநபர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும்.

இதற்கு முன்னதாக, கடந்த 2005 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் கெவின் பீட்டர்சன் ஆஷஸ் தொடரில் 14 சிக்ஸர்கள் அடித்திருந்ததே தனி ஒருவரால் ஆஷஸ் தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்களாக இருந்தது. தற்போது அவரது இந்த சாதனையை பென் ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.