மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

டபிள்யுடிசி: இறுதிப் போட்டியிலிருந்து ஹேஸில்வுட் விலகல்!

ஆஸ்திரேலியாவின் பிரபல வேகப் பந்து வீச்சாளார் ஹேஸில்வுட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்து விலகினார். 

News image

ஹேஸில்வுட் (கோப்புப் படம்)

Updated On :5 ஜூன் 2023, 3:15 pm IST

ஐசிசி சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம் லண்டனில் வரும் ஜூன் 7-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பலம் வாய்ந்த ஆஸி. அணி முதன்முதலாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த டபிள்யுடிசி இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோற்று வெற்றி வாய்ப்பை இழந்தது இந்தியா.

ஓவல் மைதானம் சிறப்பானது. பௌலா்களுக்கு உதவியாக இருக்கும். அதிலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். டபிள்யுடிசிக்கு அடுத்து முக்கியமான ஆஷஸ் தொடர் ஜூன் 16இல் தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா மோதும். இதற்காக இங்கிலாந்து வீரர்கள் கடுமையாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேஸில்வுட் விலகியுள்ளார். 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஹேஸில்வுட்  222 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். 

தேர்வுக்குழு தலைவர் ஜியார்ஜ் பெய்லி கூறியதாவது: 

ஜோஸ் ஹேஸில்வுட் விளையாடுவதற்கு பச்சைக்கொடி காட்டுவதாகதான் இருந்தார். ஆனால் அடுத்துவரும் ஆஷஸ் தொடரினையும் விழிப்புணர்வோடு அணுக வேண்டியுள்ளது. 6 டெஸ்ட் போட்டிகள் 7 வாரத்திற்குள் நடக்கவிருக்கிறது. அதற்கு எங்களது வேகப் பந்து வீச்சாளர்கள் தயராக வேண்டும். எட்ஜ்பாஸ்டனில் நடக்கவிருக்கும் போட்டிக்கு தயாராக ஹேஸில்வுட்க்கு இது சரியான கால அவகாசமாக இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.