குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

2343 நாள்கள் முதலிடத்தில் இருந்த ஒரே பந்து வீச்சாளர்: ஸ்டெயின் பிறந்தநாளில் ரசிகர்கள் நெகிழ்ச்சி! 

தென்னாப்பிரிக்காவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

News image
Updated On :27 ஜூன் 2023, 11:34 am IST

இன்று தென்னாப்பிரிக்காவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் பிறந்தநாள். 2004ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆரம்பித்த ஸ்டெயின் 2019இல் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2021இல் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

சச்சின், ரோஹித் முதற்கொண்டு பல முக்கியமான பேட்டர்களை இவரது பந்து வீச்சில் தடுமாறும் அளவுக்கு சிறப்பாக பந்து வீசக்கூடியவர் ஸ்டெயின்.  

93  டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்டெயின் 439 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதில் ஒருமுறை 7 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தியுள்ளார். 2009 முதல் 2014 வரை டெஸ்ட் போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தவர் ஸ்டெயின். 

இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்டெயினுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் அவரது விடியோக்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.