இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேச அணி.
சட்டோகிராமில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 48.5 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்தது. ஷான்டோ 53, முஷ்ஃபிகுர் ரஹிம் 70, ஷகிப் அல் ஹசன் 75 ரன்கள் எடுத்தார்கள். ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஷகிப் அல் ஹசன் உள்பட வங்கதேச வீரர்கள் சிறப்பாகப் பந்துவீசி இங்கிலாந்து அணியை 196 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்தார்கள். ஜேம்ஸ் வின்ஸ் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார். ஒருநாள் தொடரில் 8 விக்கெட்டுகள் எடுத்த அடில் ரஷித், தொடர் நாயகன் விருதை வென்றார். 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து.