நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் வேகப் பந்துவீச்சாளார் கைல் ஜேமிசன் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், லாகி பெர்க்யூசன் மற்றும் மார்க் சேப்மேன் ஆகியோர் காயம் காரணமாக பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அந்த வரிசையில் தற்போது மாட் ஹென்றி மற்றும் ஜேம்ஸ் நீஷம் இணைந்துள்ளனர். நியூசிலாந்து அணிக்காக மாட் ஹென்றி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் அவர் நியூசிலாந்து பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிக்க: ஆஸி.க்கு பின்னடைவு: தாயகம் திரும்பும் மிட்செல் மார்ஷ்!
இது தொடர்பாக நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியதாவது: மாட் ஹென்றிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம். அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. ஸ்கேன் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். ஒருநாள் போட்டிகளில் மாட் ஹென்றி நியூசிலாந்து அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். நியூசிலாந்து அணியின் கைல் ஜேமிசன் தயாராக இருக்கிறார். அவர் நியூசிலாந்து அணியுடன் இணைய உள்ளார். அவர் நாளை மறுநாள் (நவம்பர் 4) நடைபெறும் போட்டிக்கு அணியில் இணைவதற்கு தயாராக இருப்பார் என்றார்.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் முதல் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்ற நியூசிலாந்து அணி கடந்த 3 போட்டிகளில் தோல்விகளை சந்தித்துள்ளது. இதன்மூலம், 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து 4-வது இடத்தில் உள்ளது.
நாளை மறுநாள் (நவம்பர் 4) பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து பாகிஸ்தானை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா..?- உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை

காமன்வெல்த்தில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற மீராபாய் சானு - புகைப்படங்கள்

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!







