ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தாயகம் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் தோல்வியை சந்தித்தாலும், தொடர் வெற்றியின் மூலம் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலியா அணி விளையாடிய 6 போட்டிகளில் 4-இல் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை கிட்டத்திட்ட உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், தனது சொந்த காரணங்களுக்காக தாயகம் செல்கிறார் என்றும், இங்கிலாந்துக்கு எதிராக சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் விளையாட மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | இன்று இலங்கையை சந்திக்கிறது இந்தியா
மேலும், அவரின் பயணக் காலம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
மார்ஷ் மீண்டும் அணியில் இணைவாரா அல்லது அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படுவாரா என்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - பிஇ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பு!

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா..?- உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை

காமன்வெல்த்தில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற மீராபாய் சானு - புகைப்படங்கள்






