காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

ஆஸி.க்கு பின்னடைவு: தாயகம் திரும்பும் மிட்செல் மார்ஷ்!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தாயகம் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

மிட்செல் மார்ஷ்

Updated On :2 நவம்பர் 2023, 10:39 am IST

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தாயகம் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் தோல்வியை சந்தித்தாலும், தொடர் வெற்றியின் மூலம் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியா அணி விளையாடிய 6 போட்டிகளில் 4-இல் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை கிட்டத்திட்ட உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், தனது சொந்த காரணங்களுக்காக தாயகம் செல்கிறார் என்றும், இங்கிலாந்துக்கு எதிராக சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் விளையாட மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், அவரின் பயணக் காலம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மார்ஷ் மீண்டும் அணியில் இணைவாரா அல்லது அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படுவாரா என்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.