400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

இந்தியாவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள நாங்கள் தயார்: தென்னாப்பிரிக்க வீரர்

இந்தியாவுக்கு எதிரான சவாலை சமாளிக்கத் தயாராக உள்ளோம் என தென்னாப்பிரிக்க வீரர் ராஸி வாண்டர் துசென் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 நவம்பர் 2023, 7:58 pm IST

இந்தியாவுக்கு எதிரான சவாலை சமாளிக்கத் தயாராக உள்ளோம் என தென்னாப்பிரிக்க வீரர் ராஸி வாண்டர் துசென் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்த உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி அசைக்க முடியாத அணியாக உள்ளது. இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் அசைக்க முடியாத அணிகளாகத் திகழும் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையான போட்டி வருகிற நவம்பர் 5-ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான சவாலை சமாளிக்கத் தயாராக உள்ளோம் என தென்னாப்பிரிக்க வீரர் ராஸி வாண்டர் துசென் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவில் விளையாடுவது மிகப் பெரிய தருணம். இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர். அவர்களது அணிக்கு அதிக அனுபவம் இருக்கிறது. பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்துத் துறைகளிலும் இந்திய அணி சிறப்பாக செயல்படுகிறது. நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். அதனை இந்திய அணிக்கு எதிராகவும் வெளிப்படுத்தினால் நாங்கள் மிகவும் வலிமையான அணியாக இருப்போம். இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக விளையாடி அவர்களை வீழ்த்தியிருக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்  என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.