தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

இந்தியாவிடம் தோற்றது எங்கள் கண்களை திறந்துவிட்டது: தென்னாப்பிரிக்க வீரர்

உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு முன்னதாக எங்களது தவறுகளை திருத்திக் கொள்ள உதவும் என கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :6 நவம்பர் 2023, 3:15 pm IST

உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு முன்னதாக எங்களது தவறுகளை திருத்திக் கொள்ள உதவும் என தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று (நவம்பர் 5) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 243  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் அபார பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இந்த நிலையில், உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு முன்னதாக எங்களது தவறுகளை திருத்திக் கொள்ள உதவும் என  கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான போட்டி இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான ஒரு முன்னோட்டம் என நான் நினைக்கிறேன். அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் எங்களது தவறுகளை அடையாளங்கண்டு திருத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் கடந்த போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். அந்த சிறப்பான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்த வேண்டும்.

சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவிக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு இந்தியாவுக்கு எதிரான தோல்வி முற்றுப்புள்ளி வைத்து எங்களை விழித்துக் கொள்ளச் செய்துள்ளது. நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் ஜடேஜா மிகச் சிறப்பாக பந்துவீசினார் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.