ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

இந்தியாவிடம் தோற்றது எங்கள் கண்களை திறந்துவிட்டது: தென்னாப்பிரிக்க வீரர்

உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு முன்னதாக எங்களது தவறுகளை திருத்திக் கொள்ள உதவும் என கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:47 am IST

உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு முன்னதாக எங்களது தவறுகளை திருத்திக் கொள்ள உதவும் என தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று (நவம்பர் 5) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 243  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் அபார பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இந்த நிலையில், உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு முன்னதாக எங்களது தவறுகளை திருத்திக் கொள்ள உதவும் என  கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான போட்டி இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான ஒரு முன்னோட்டம் என நான் நினைக்கிறேன். அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் எங்களது தவறுகளை அடையாளங்கண்டு திருத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் கடந்த போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். அந்த சிறப்பான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்த வேண்டும்.

சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவிக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு இந்தியாவுக்கு எதிரான தோல்வி முற்றுப்புள்ளி வைத்து எங்களை விழித்துக் கொள்ளச் செய்துள்ளது. நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் ஜடேஜா மிகச் சிறப்பாக பந்துவீசினார் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.