இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

இது தோனி கற்றுக் கொடுத்த மந்திரம்; மனம் திறந்த ரிங்கு சிங்!

அழுத்தமான சூழலில் பதற்றமின்றி செயல்படுவதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக இந்திய வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 நவம்பர் 2023, 7:40 pm IST

அழுத்தமான சூழலில் பதற்றமின்றி செயல்படுவதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக இந்திய வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று (நவம்பர் 23) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 209 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 80 ரன்களும், இஷான் கிஷன் 58 ரன்களும் எடுத்தனர்.

இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் இந்திய அணிக்கு  வெற்றியைப் பெற்றுத் தந்தார். அதிரடியாக விளையாடிய அவர் 14  பந்துகளில் 22 ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் கடைசிப் பந்தை சிக்ஸருக்கு விளாசி இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார் ரிங்கு சிங். 

இந்த நிலையில், அழுத்தமான சூழலில் பதற்றமின்றி செயல்படுவதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக இந்திய வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அவர் பேசியிருப்பதாவது: அழுத்தமான சூழலில் பதற்றமின்றி அமைதியாக இருப்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் ஆலோசித்துள்ளேன். அதிலும் குறிப்பாக, ஆட்டத்தின் இறுதி ஓவரில் எப்படி பதற்றமாகாமல் இருப்பது என்பது குறித்தும் பேசியுள்ளேன்.

Story image

நம்மால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்க வேண்டும். நேராக நேர்மறையான சிந்தனையுடன் பந்துவீச்சாளரைப் பார்க்க முயற்சிக்க வேண்டும். அப்படி செய்வதுதான் போட்டியில் நான் பதற்றமின்றி இருப்பதற்கு காரணம் என தோனி கூறினார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.