இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 95.20 ஆக நிறைவு!பங்குச் சந்தை சரிவு: சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கும், நிஃப்டி 24,550க்கு அருகில் சென்று நிறைவு!!பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்!
/

உலகக் கோப்பை நேரத்தில் நான் செய்த விஷயம் வீண்போகவில்லை: இஷான் கிஷன்

உலகக் கோப்பைத் தொடரின்போது பயிற்சியாளர்களிடம் அதிகம் பேசியதும் வலைப்பயிற்சி மேற்கொண்டதும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட உதவியது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:55 am IST

உலகக் கோப்பைத் தொடரின்போது பயிற்சியாளர்களிடம் அதிகம் பேசியதும் வலைப்பயிற்சி மேற்கொண்டதும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட உதவியதாக இந்திய அணியின் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடர் முடிவடைந்த சில நாட்களிலேயே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தொடங்கியுள்ளது.  5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று (நவம்பர் 23) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில்  இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 80 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 39 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடரின்போது பயிற்சியாளர்களிடம் அதிகம் பேசியதும் வலைப்பயிற்சி மேற்கொண்டதும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட உதவியதாக இந்திய அணியின் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பைத் தொடரின்போது அணியில் நான் விளையாடதபோது ஒவ்வொரு பயிற்சிக்கு முன்பும் என்னை நானே சில கேள்விகள் கேட்டுக் கொண்டேன். எனக்கு தற்போது எது மிகவும் முக்கியம் என்பதையும், என்னால் தற்போது என்ன செய்ய முடியும் என்பதையும் கேட்டுக் கொண்டேன். நான் அதிக நேரம் வலைப்பயிற்சி மேற்கொண்டேன்.

ஆட்டங்கள் குறித்தும், ஆட்டத்தினை எவ்வாறு ஆழமாக எடுத்துச் செல்வது என்பது குறித்தும் பயிற்சியாளர்களிடம் அதிகம் பேசினேன். குறிப்பிட்ட சில பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொண்டு திறம்பட விளையாடுவது என்பது குறித்தும் பேசினேன். 209 ரன்கள் என்ற இலக்கை துரத்தும்போது நீங்கள் ஒரு பந்துவீச்சாளரை குறிவைத்து ரன்கள் எடுக்க வேண்டியதாக இருக்கும். அதனால் தன்வீர் சங்காவின் பந்துகளில் ரன்கள் அடிக்க உள்ளதாக சூர்யகுமார் யாதவிடம் கூறினேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.