திமுகவில் 77-லிருந்து 110 மாவட்டங்களாக அதிகரிப்பு! சென்னையில் 10 மாவட்டங்கள்!திபெத்தில் அணை உடைந்தது! நேபாளத்துக்கு புதிய எச்சரிக்கை! மீட்புப் பணிகள் நிறுத்தம்!தேர்தல் வழக்குகள்! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனா மனுக்களுக்கு பதிலளிக்க திமுக வேட்பாளர்களுக்கு உத்தரவு!நேபாள வெள்ளம்! பலி எண்ணிக்கை 500-ஐ கடந்தது! மீட்புப் பணிகள் தீவிரம்!உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்

உலகக் கோப்பையில் புதிய சாதனையை நோக்கிப் பயணிக்கும் டேவிட் வார்னர்!

உலகக் கோப்பையில் தனது 5-வது சதத்தை ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் இன்று (அக்டோபர் 20) நிறைவு செய்தார்.

Published On :2 பிப்ரவரி 2024, 8:41 am IST

உலகக் கோப்பையில் தனது 5-வது சதத்தை ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் இன்று (அக்டோபர் 20) நிறைவு செய்தார்.

உலகக் கோப்பையில் பெங்களூருவில் நடைபெற்று வரும் இன்றயைப் போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 163 ரன்கள் எடுத்தார். உலகக் கோப்பையில் இது அவருடைய 5-வது சதமாகும். 

இன்று சதம் விளாசியதன் மூலம் உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்துள்ள ரிக்கி பாண்டிங் மற்றும் குமார் சங்ககாராவின் சாதனையை வார்னர் சமன் செய்துள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் 6 சதங்களுடன் சச்சினின் சாதனையை அவர் சமன் செய்வார். இந்தப் பட்டியலில் 7 சதங்களுடன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் இடத்திலும், 6 சதங்களுடன் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.