வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

அதிவேகமாக 150 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆடம் ஸாம்பா!

அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸாம்பா இணைந்துள்ளார்.

News image
Updated On :21 அக்டோபர் 2023, 4:57 pm IST

அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸாம்பா இணைந்துள்ளார்.

உலகக் கோப்பையில் பெங்களூருவில் நேற்று (அக்டோபர் 20) நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 62 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் எடுத்த சுழற்பந்துவீச்சுளார்கள் பட்டியலிலும் அவர் இணைந்தார். 89 போட்டிகளில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். 

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர்கள்

சாக்லைன் முஸ்தக் - 78 போட்டிகளில் 
ரஷித் கான் - 80 போட்டிகளில் 
அஜந்தா மெண்டிஸ் - 84 போட்டிகளில் 
குல்தீப் யாதவ் - 88 போட்டிகளில் 
இம்ரான் தாஹிர் - 89 போட்டிகளில்
ஆடம் ஸாம்பா - 89 போட்டிகளில் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.