மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!எச்.டி.எப்.சி. வங்கியின் ஊழியர்கள் எண்ணிக்கை கணிசமாக சரிவு!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

நாளை புதிய பாகிஸ்தான் அணியைக் காண்பீர்கள்: இமாம் உல் ஹக்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புதிய பாகிஸ்தான் அணியை பார்ப்பீர்கள் என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 அக்டோபர் 2023, 7:44 pm IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புதிய பாகிஸ்தான் அணியை பார்ப்பீர்கள் என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது. 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் 5-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் பாகிஸ்தான் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.  இதன்மூலம், தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புதிய பாகிஸ்தான் அணியை பார்ப்பீர்கள் என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளோம். நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியக் கட்டாயத்தில் உள்ளோம். போட்டி நடைபெறும் நாளில் நீங்கள் எவ்வாறு விளையாடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். போட்டிக்கு முன்பு எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், போட்டியின்போது எவ்வாறு செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம். நாங்கள் நிறைய பேசிவிட்டோம். நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய பாகிஸ்தான் அணியைக் காண்பீர்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.