ஆசிய விளையாட்டு: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தங்கம்!

ஆசிய விளையாட்டு போட்டிகள் மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றது.
படம்: ட்விட்டர் / ஜெய் ஷா
படம்: ட்விட்டர் / ஜெய் ஷா
Updated on
1 min read

ஆசிய விளையாட்டு போட்டிகள் மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றது.

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இந்தியா - இலங்கை இடையே திங்கள்கிழமை நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது. அதிகபட்சமாக இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 46 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களும் எடுத்தனர்.

எளிய இலக்கை விரட்டிய இலங்கை வீராங்கனைகள் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவினர்.

19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. இலங்கை அணி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தது.

இதன்மூலம் இரண்டு தங்கப் பதக்கங்களுடன் இந்தியா இதுவரை 11 பதக்கங்கள் வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com