ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் 1893.7 புள்ளிகள் பெற்று இந்தியா தங்கம் வென்றுள்ளது. இந்திய வீரர்கள் திவ்யான்ஷ் சிங் பன்வார், ருத்ரன்காஷ் பாட்டீல், ஐஸ்வரி பிரதாப்சிங் தோமர் ஆகியோர் அடங்கிய குழு தங்கம் வென்றது.
1890.1 புள்ளிகளுடன் தென் கொரியா வெள்ளிப் பதக்கத்தையும் சீனா 1888.2 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் தக்க வைத்தது. இதேபோல் துடுப்பு போட்டியிலும் இந்தியாவுக்கு இன்று பதக்கம் கிடைத்துள்ளது.
நால்வர் துடுப்பு படகுப் போட்டியில் ஜஸ்விந்தர் சிங், பீம்சிங், புனித்குமார்,
ஆஷிஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் வென்று இந்திய அணி பதக்கப் பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









