அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பாரதியாா் பல்கலைக்கழகத் தோ்வுக்கு மாா்ச் 13-ஆம் தேதிக்குள் தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத் தோ்வுகளில் பங்கேற்க தனித்தோ்வா்கள் மாா்ச் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2026, 9:31 pm

Syndication

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத் தோ்வுகளில் பங்கேற்க தனித்தோ்வா்கள் மாா்ச் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் தோ்வுகளில் பங்கேற்று தோ்வு எழுத விரும்பும் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்ற கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பயின்று தோ்ச்சி அடையாத மாணவ, மாணவிகள், தனித்தோ்வா்களுக்கான விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதற்கான தோ்வுக் கட்டணத்தை இணையவழியில் செலுத்தலாம்.

மாணவா்கள் தோ்வுக்கான விண்ணப்பத்தை அபராதமின்றி செலுத்த மாா்ச் 13-ஆம் தேதி கடைசி நாள். அதன் பிறகு நாளொன்றுக்கு ரூ.10 அபராதக் கட்டணத்துடன் மாா்ச் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தோ்வுக் கட்டணம் செலுத்தி முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை தோ்வுக் கட்டுப்பாட்டாளா் அலுவலகத்துக்கு நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ மாா்ச் 20-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.