ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டில் தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளில் ஒருவரான ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆடவர் அணி தங்கம் வெல்வதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இன்று (செப்டம்பர் 25) இலங்கையை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 46 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: 2011 உலகக் கோப்பை தருணத்தை மீண்டும் உருவாக்குவோம்: கே.எல்.ராகுல்
எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை வீராங்கனைகள் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவினர். இதன்மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறது இந்திய மகளிர் அணி.

இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டில் தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளில் ஒருவரான ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆடவர் அணி தங்கம் வெல்வதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் ஆடவர் கிரிக்கெட் அணியினருடன் பேசினோம். நாங்கள் தங்கப் பதக்கம் வென்றுள்ளோம். நீங்களும் தங்கப் பதக்கத்தை வென்று வாருங்கள் என்றோம். ஆசிய விளையாட்டுப் போட்டி கிரிக்கெட்டில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியான மற்றும் பெருமை மிக்க தருணம். இந்தியாவின் பதக்கப் பட்டியலில் பதக்கத்தை சேர்ப்பது பெருமை கொள்ளச் செய்கிறது. இது ஒரு வித்தியாசமான அனுபவம். இந்திய அணியின் ஜெர்சியை அணிவது மிகுந்த பெருமையளிக்கிறது. இலங்கை அணி வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடினர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது - நேரலை!

ஓடிடியில் வெளியானது உயிர் திரைப்படம்!

உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!
உதயநிதி கைது; தவெக அரசின் கோழைத்தனம்: கனிமொழி கண்டனம்
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK



